ஹாஸ்டலில் வைத்தே ஓயாமல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அமமுக முக்கிய பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.!
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் சிறப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Surabi Nursing College
திண்டுக்கல் அருகே பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தாளாளராக ஜோதிமுருகன் இருந்து வருகிறார். இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், சில மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.மேலும், வேட்டை நாய்கள், காதல் 16 என 2 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01fn0mbe983a4w151a7xa6e2y0/surabi-nursing-college_300x169xt.jpg)
sexual harassment
இந்நிலையில், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது விருப்பத்திற்கு இணங்காத மாணவிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜோதி முருகன், கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க;- உறவுக்கார பெண்ணிடம் செய்யற வேலையா இது! குளிக்கும் போது வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த திமுக பிரமுகர்.!
Jyoti Murugan
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.
AMMK
அதில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டுட்டு ஜோதி முருகன் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!