9 மணி காட்சிக்கும் வருகிறது தடை? ஜெயிலருக்கு ஒரு நியாயம்.. லியோவுக்கு ஒரு நியாயமா? சோசியல் மீடியாவில் சலசலப்பு
தமிழகத்தில் இனி 9 மணி காட்சிக்கும் தடைவிதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவதால் விஜய்யின் லியோ பட வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
Thalapathy vijay
தமிழ்நாட்டில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனபோது அதிகாலை 1 மணி காட்சி திரையிடப்பட்டது. அப்போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கிழே விழுந்து மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Jailer Jawan
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால், இனி அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என தடாலடியாக அறிவித்தது அரசு. அதன்பின்னர் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்கள் எதற்குமே அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்கிற நிலை மாறியது. ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படம் ஆகியவற்றின் முதல் காட்சிகள் கூட 9 மணிக்கு தான் திரையிடப்பட்டன.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் வெற்றி.. கார், தங்க காசை தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த Gift - இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!
Leo Vijay
இந்த நிலையில், இனி 9 மணி காட்சிகளுக்கும் தமிழகத்தில் தடைவிதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜவான் படத்தை 9 மணிக்கு திரையிட்ட தியேட்டர்களிடம் விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம். இதன்மூலம் விரைவில் 9 மணி காட்சிக்கும் தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி 9 மணி காட்சிக்கும் தடை விதிக்கப்பட்டால் அனைத்து படங்களும் காலை 11 மணிக்கு தான் முதல் காட்சியை திரையிட முடியும்.
Leo FDFS
நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அரசு இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கி உள்ளது விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு தற்போது 9 மணி காட்சிக்கு தடை விதிக்க முயல்வது ஏன் என ரசிகர்களும், நெட்டிசன்களும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யின் லியோ படம் ஜெயிலர் பட முதல் நாள் வசூலை முறியடித்துவிட கூடாது என்பதற்காகவே இப்படி செய்வதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்... மருமகன்னா இப்படி இருக்கனும்.. அத்தையம்மாவிற்கு வாழ்த்து சொன்ன விக்கி - ஒன்றுகூடிய நயன்தாரா ஃபேமிலி!