Keerthy Suresh Replay: 234 நாட்கள்... ரசிகரை காக்கவைத்ததற்கு மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! ஏன் தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர், விடாப்பிடியாக அவருக்கு எக்ஸ் தளத்தில் 234 நாட்கள் ட்வீட் போட்டு வந்த நிலையில், இறுதியாக கீர்த்தி சுரேஷ் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.
பிரபல நடிகை மேனகாவின் மகள் என்பதால், வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் இருந்தாலும், அடுத்தடுத்து இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து... ஹிட் லிஸ்டில் இணைந்தது.
வெற்றிப்பட ஹீரோயினாக அறியப்பட்ட பின்னர், வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டினார். அந்த வகையில் தனுஷ், விக்ரம், விஜய், சூர்யா, போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக தமிழில் நடித்தார். தெலுங்கிலும் மகேஷ் பாபு, நானி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால்... நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த 'மகாநடி' திரைப்படம் தான். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
சமீப காலமாக தென்னிந்திய மொழி படங்களை கடந்து, ஹிந்தியிலும் கீர்த்தி சுரேஷின் கவனம் திரும்பியுள்ளது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானின் 18-ஆவது திரைப்படமாக உருவாகும் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தெறி படத்தின் இயக்குனர் அட்லீ தயாரிக்க, கலீஷ் என்பவர் இயக்க உள்ளார்.
'தெறி' படத்தின் ரீமேக்கில் சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி நடிக்க உள்ளதாகவும், எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் வாமிகா கபி நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களால் அதிகம் தேடப்படும் நாயகிகள் லிஸ்டில் உள்ள கீர்த்தி சுரேஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். மேலும் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் கிருஷ்ணா... 234 நாட்கள் இடை விடாமல் தொடர்ந்து ட்விட் போட்டு, கீர்த்தி தனக்கு ரிப்பிலே செய்யுமாறு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
ஒருவழியாக கீர்த்தி சுரேஷ் 234-ஆவது நாளில் அவருக்கு ரிப்பிளே செய்துள்ளதோடு... இது மிகவும் பேன்சி நம்பர் என கூறியுள்ளார். அதே சமயம் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கோரி... உங்களி அதிகம் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.