ஐடி கம்பெனி முதல்.. 3000 ஏக்கரில் விவசாயம் வரை! அமெரிக்கர்களை அசர வைக்கும் நெப்போலியனின் Net Worth விவரம்!
தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கு தடபுடலாக தயாராகி வரும், நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
nepolean
திருச்சியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, அங்கேயே படித்து பின்னர் பிரபல இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' படத்தில் வில்லனாக அறிமுகமானார் நெப்போலியன். இவருக்கு பெற்றோர் வைத்த உண்மையான பெயர் குமரேசன். ஆனால், பார்ப்பதற்கு நல்ல உயரமாகவும்... வாட்டசாட்டமாக மாவீரன் நெப்போலியன் போல் இருந்ததால் பாரதி ராஜா தான் நெப்போலியன் என பெயர் வைக்க, பின்னர் அந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது
nepolean
வில்லனில் இருந்து மெல்ல, மெல்ல ஹீரோவாக புரோமோட் ஆன நெப்போலியனுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. இதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த எட்டுப்பட்டி ராசா திரைப்படம் நெப்போலியனை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற எட்டுப்பட்டி ராசா, பஞ்சிமிட்டாய் சேலை கட்டி போன்ற பாடல்கள் 90'ஸ் கிட்ஸின் ஃபேவரட் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
திரையுலகில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், கலைஞர் கருணாநிதி மீது இருந்த பற்றின் காரணமாகவும், நெப்போலியனின் மாமா நேரு திமுக கட்சியில் இருந்ததாலும் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 2001-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக மாறினார். மக்களின் குறைகளை கேட்டறிந்து சிறப்பாக பணியாற்றி இவர் பின்னர் பெரம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக மாறினார்.
சினிமா - அரசியல் என இவருக்கு இரண்டிலுமே ஆர்வம் இருந்த போதிலும்... தன்னுடைய மகனுக்காகவும், குடும்பத்திற்காகவும் அனைத்தையும் உதறிவிட்டு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆனார். நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் நெப்போலியனில் மூத்த மகன் தனுஷ் 5 வயது வரை சாதாரண குழந்தைகள் போல் இருந்தாலும் பின்னர் அரிய வகை தசை அழிச்சி நோயால் பாதிக்கப்ட்டர்.
தன்னுடைய மகனுக்கு இந்தியாவை விட அமெரிக்காவில் சிறந்த மருத்துவ முறை உள்ளதால் அங்கேயே வீடு, பிஸ்னஸ் என செட்டில் ஆனார். அதன்படி நெப்போலியன் அமெரிக்காவில் நடத்தி வரும் ஐடி கம்பெனியில் சுமார் 1000 பேர் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இவர்களின் பாதி பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். அதுவும் சினிமா துறையில், லைட் மேன், மேக்கப் மேன், போன்ற எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர்களின் பிள்ளைகள் தானாம்.
அதே போல் சுமார் 3000 ஏக்கரில் மிகப்பெரிய பண்ணை ஒன்றையும் வைத்துள்ளார். இதில் மாடுகள் வளர்ப்பு, காய்கறி தோட்டம், மீன் வளர்ப்பு, குளம் போன்ற பல்வேறு இயற்க்கை சூழல் நிறைந்துள்ளது. இவரது பண்ணையிலும் சுமார் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
தன்னுடைய வீட்டை கூட மகன்களின் ஆசை படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டியுள்ளாராம் நெப்போலியன். தன்னை பார்க்க வந்தால் அவர்களை சந்திக்க பிரத்தியேக இடம், பர்சனல் நண்பர்களை சந்திக்க அவர்களுடன் பேசி மகிழ தனி இடம் உள்ளதாம். அதே போல் தன்னுடைய மூத்த மகனுக்காக வீட்டிலேயே 4 லிப்ட் உள்ளதாம். அவருக்கென தனி நீச்சல் குளமும் கட்டி அசத்தியுள்ளார்.
அமெரிக்காவில் தன்னுடைய மகன்களுக்கு பிடித்த சொகுசு கார் மட்டும் அவருக்கு பிடித்த கார் என 4 கார்கள் உள்ளதாம். குடும்பத்துடன் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால், லிப்ட் மற்றும் படுக்கை வசதியுடன் கொண்ட பெரிய வேன் ஒன்றையும் கஸ்டமைஸ் செய்துள்ளார்.
வெளிநாட்டை தவிர, நடிகர் நெப்போலியனுக்கு சென்னை மற்றும் திருச்சியிலும் பல சொத்துக்கள் உள்ளன. மேலும் இவரின் சொத்து மதிப்பு எப்படியும் 500 கோடி இருக்கும் என கூறப்டுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
dhanoosh nepolean
நெப்போலியன் தற்போது தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அக்ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ள நிலையில்... திருமணத்திற்கான ஏற்பாடுகள் கலை கட்டியுள்ளது. இதற்காக அடிக்கடி இந்தியா வரும் நெப்போலியன் முக்கிய பிரபலங்களை சந்தித்து திருமண பத்திரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. பல கோடி செலவு செய்து இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம் நெப்போலியன்.