சூர்யா திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க சென்ற சிவகுமார்! வர முடியாது என கூறிய கேப்டன்.. ஏன் தெரியுமா?
சூர்யாவை ரொம்ப பிடிக்கும் என்றாலும், அவரின் திருமணத்திற்கு என்னால் வர முடியாது என்று கேப்டன் விஜயகாந்த் சிவகுமாரிடம் அழைப்பிதழ் கொடுக்கும் போதே கூறி, இதற்கான காரணத்தையும் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவும் - ஜோதிகாவும் பல வருடங்கள் காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நடிகர் விஜயகாந்த் கலந்து கொள்ளாததன் காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
RIP Captain Vijayakanth
தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தன்னை மதித்து வீட்டிற்கு வரும் அனைவரையும் அன்பாக உபசரித்து, சாப்பிட வைத்து தான் அனுப்புவார். அதே போல் தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கும்... இல்லை என சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளல் குணம் படைத்தவர். இவரால், திரையுலகிலும் சரி வெளியுலகில் சரி இன்று நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகுமார், விஜயகாந்தை தேடி சென்று சூர்யாவின் திருமணத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தும், விஜயகாந்த் தன்னால் வரமுடியாது என கூறி அதற்கான காரணத்தையும் அவரிடம் கூறியுள்ளார்.
விஜயகாந்த் அரசியலில் தீவிரம் காட்டிய சமயம் அது. சில முக்கிய அரசியல் தலைவர்கள்... விஜயகாந்த் கட்சி துவங்க கூடாது என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், நான் அங்கு வந்தால், அது பிறருக்கு அசைவுகரியத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே நான் திருமணத்திற்கு வர முடியாது என கூறிவிட்டாராம். திருமணம் முடிந்த பிறகு, சூர்யா மற்றும் ஜோதிகாவை வீட்டில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் அன்பு பரிசையும் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.
ராதிகா நடித்து வரும் 'பொன்னி சி/ஓ ராணி' சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது! வாழ்த்தும் ரசிகர்கள்!
சூர்யா வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக இருந்த போது... விஜயகாந்த் சூர்யாவுடன் இணைந்து நடித்த பெரியண்ணா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் சூர்யா விஜயகாந்துக்கு மிகவும் பரிச்சயமானவர். கேப்டானின் அன்பிற்குரிய நபராகவும் இருந்தார்.
vijayakanth
விஜயகாந்த் மறைவின் போது ... சூர்யா வெளிநாட்டில் இருந்த நிலையில், விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து சூர்யா உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.