Vanangaan Wrapped: ஒருவழியாக 'வணங்கான்' படப்பிடிப்பை முடித்த இயக்குனர் பாலா! வெளியான புகைப்படம்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'அமைதிப்படை 2', 'கங்காரு', 'மிகமிக அவசரம்', 'மாநாடு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தயாரிப்பில் பாலா இயக்கத்தில் எடுக்கப்பட்டு வந்த படம் ‘வணங்கான்’.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை கலை படைப்பா, கமர்ஷியல் படைப்பா என பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பாலா.
அருண் விஜய் - பாலா கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் படம் என்பதாலேயே ‘வணங்கான்’ படம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில், ஏற்கெனவே ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.
புடிச்சாலும் புளியம் கொம்புதான்! தன்னை விட வசதியான பெண்ணை திருமணம் செய்து கொண்ட 7 தமிழ் நடிகர்கள்!
இந்நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.