Relationship Horoscope: பெற்றோரின் நம்பிக்கைக்கு உகந்த ராசி கொண்ட பிள்ளைகள்...உங்கள் குழந்தை என்ன ராசி..?
Relationship Horoscope: இந்த ராசி பலன்களை கொண்டவர்கள் தங்கள் பெற்றோரின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாய் இருப்பார்களாம். ஒரு போதும் சண்டைகள் மற்றும் மோதல்களை பெற்றோரிடம் வைத்து கொள்ள விரும்பாதவர்கள். அவர்கள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
zodiac signs
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கடவுள் கொடுத்த வரம் ஆகும். இருவருக்கும் இடையேயான உறவு என்பது காலத்தால் அழியாத சுய நலமற்ற உறவாகும். என்ன தான் சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் நமக்கு பிரச்சனை என்றதும் முதலில் நினைவிற்கு வருவது தாய், தந்தையின் உறவாகும். பெற்றோர் தங்களை வழி நடத்தும் விதம், வளர்ப்பு முறை, குடும்பம் தவிர்த்து மற்றவருடனான தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை பொதுவாக பிள்ளைகளின் குணங்களைத் தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் ராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது.
zodiac signs
அப்படியாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி பலன்களை கொண்டவர்கள் தங்கள் பெற்றோரின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாய் இருப்பார்களாம். ஒரு போதும் சண்டைகள் மற்றும் மோதல்களை பெற்றோரிடம் வைத்து கொள்ள விரும்பாதவர்கள். இவர்கள் பெற்றோரின் சொல்லே மந்திரம் என்று இருப்பவர்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Only these people should wear Sapphire gemstone, know its effect and how to wear it
ரிஷபம்:
ரிஷபம் ராசியுடைய குழந்தைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும், உணர்திறன் உடையவர்களாகவும் இருப்பதால், பெற்றோரின் கைக்குள் எப்போதும் இருப்பார்களாம். இவர்கள் ஒரு போதும் மற்றவரிடம் தாய், தந்தையை விட்டு கொடுக்காதவர்கள். இவர்கள் எப்பொழுதும் பெற்றோருடன் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருக்க விருப்பம் உடையவர்கள். பெரும்பாலும், பிறருடன் சண்டையில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள்.
zodiac signs
கடகம்:
உணர்ச்சிவசம் அதிகம் இருப்பதால் எளிதில் அன்பிற்கு அடிமையாகி விடுவார்களாம். இது உங்கள் குழந்தைக்கு உங்கள் மேல் இருக்கும் பாச பிணைப்பை மேம்படுத்தும். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது அன்னோன்யன் அதிகரிக்கும். இவர்கள் தங்கள் பெற்றோருக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.
zodiac signs
கன்னி:
கன்னி ராசி கொண்டவர்கள் பொதுவாக, அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் சொல் படி கேட்பவர்கள். கன்னி ராசி கொண்ட பிள்ளைகளை பெற்றோர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவார்கள். கன்னி ராசி கொண்டவர்கள் மென்மையானவர்கள், இவர்கள் சிறு சொல்லைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மணம் கொண்டவர்கள். அதனால், பெற்றோரை தவிர பிறருடன் வாழ விரும்பாதவர்கள்.