Power Shutdown in Chennai: இன்னைக்குன்னு பார்த்து.. சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் பவர் கட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி:
ஆலந்தூர் பாலகிருஷ்ணாபுரம் 1 முதல் 3வது தெரு, ஆபிசர்ஸ் காலனி, கக்கன் நகர் முழு பகுதி, அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர், நங்கநல்லூர் பி.வி.நகர், எம்ஜிஆர் சாலை, கங்கம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.