Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சைதாப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சைதாப்பேட்டை:
தோட் ஹண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சிஐடி நகர் மெயின் ரோடு, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரணீஸ்வரர் கோவில் தெரு, பாட்டர் தெரு, ஜோதியம்மா நகர், சாமியார் தோட்டம், ஜீனிஸ் சாலை, சின்னமலை, கரணி கார்டன், கிருஷ்ணப்பன் நாய்க்கன் தெரு மற்றும் வேச தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
வியாசர்பாடி:
அம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், டி.எச். சாலை, எஸ்.எம். செட்டி தெரு, துலுகானம் தெரு, கல்லறை சாலை மற்றும் BB சாலை (ஸ்டான்லி பிரிவு) மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.