Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகலிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முகலிவாக்கம்:
லலிதாம்பாள் நகர், குமுதம் நகர், அய்யப்பன் கோவில், டி.வி.நகர், பூந்தமல்லி மெயின் ரோடு, நந்தம்பாக்கம் - சிஆர்ஆர் புரம், எல்&டி காலனி, எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், இந்திரா நகர், தர்மராஜபுரம், ராமாபுரம் - கலசாத்தம்மன் கோவில், அஷ்வின் அம்ரிஷா, செல்லம்மாள் நகர், மூகாம்பிகை தெரு, வள்ளுவ வீதி; புழுதிவாக்கம் - செங்காளியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சாரதி நகர், மூவரசம்பேட்டை - கணேஷ் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் ஐயப்ப நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
அம்பத்தூர்:
அயப்பாக்கம் - ஐசிஎப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கா சாலை, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திப்பட்டு வானகரம் சாலை, தினேஷ் தெரு, ரோஜா தெரு, பச்சையப்பா நகர், அக்ரஹாரம், எழில் நகர் மற்றும் அண்ணனூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
செங்குன்றம்:
சோத்துப்பெரும்பேடு - செக்கஞ்சேரி, நெற்குன்றம், புதுக்குப்பம், கன்னியம்பாளையம் மற்றும் மஃபுஸ்கான்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.