Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 2 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. சென்னை வானிலை மையம்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological Department
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்த வெயிலையே சமாளிக்க முடியலேயே இன்னும் கோடை வெயிலை எப்படி சமாளிக்க போகிறோமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
Weather Report
இந்நிலையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில் இடையே குட்நியூஸ் சொன்ன வானிலை மையம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது தெரியுமா?
Tamilnadu Rain
இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் அதாவது காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.