King Kong: 52 வயதில்... ஆசைக்காக காது குத்தி கிடா விருந்து வைக்கும் நடிகர்! காமெடி நடிகரின் அட்ராசிட்டி..!
காமெடி நடிகர் கிங் காங்கிற்கு சிறு வயதில் இருந்தே, காதுகுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்த நிலையில், அதனை தன்னுடைய 52 வயதில் நிறைவேற்றிக்கொண்டு கிடா விருந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குட்டியான கியூட் காமெடியனாக வளம் வந்து பலரை சிரிக்க வைத்தவர் கிங்காங். இவரின் உண்மையான பெயர் ஷங்கர். வரதராஜபுரத்தில் பிறந்த இவர்.. நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், சிறுவயதில் இருந்தே பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்த நிலையில், திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார்.
1988-ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் நெத்தியடி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதை தொடந்து, ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், அன்புக்கட்டளை, அதிசயப் பிறவி, கிழக்கு கரை, சின்ன ஜமீன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டும் இன்றி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
90-களில் பிஸியான நடிகராக இவர் இருந்த போதும், அப்போதெல்லாம் காமெடி நடிகர்கள் ஒரு சிலரை தவிர பலருக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டதால், இவர் நடுத்தர வசதி கொண்டவராகவே இருந்தார். திருமணம் ஆகி 3 குழந்தைகள் இவருக்கு இருந்த நிலையில், 2007-ஆம் ஆண்டு கிங் காங் படவாய்ப்பு இல்லாமல் வருடமையில் வாடுவதாக செய்திகள் வெளியாகின.
இதை தொடர்ந்து போக்கிரி, கருப்பசாமி குத்தகைதாரர், பிறகு, இந்திரலோகத்தில் நா. அழகப்பன், காசிமேடு கோவிந்தன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் சிறு வயதில் இருந்தே நடிகர் கிங்காங்குக்கு காது குத்திக்கொள்ள வேண்டும் என்பது. இந்த ஆசையை தன்னுடைய 52 வயதில் பூர்த்தி செய்துகொண்டுள்ளார்.
இன்று காது குத்திகொண்டுள்ள நிலையில், தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அடுத்த வாரம் கிடா விருந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் இவரின் மகள் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதன் கொண்டாடமாகவும் இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.