Meena: 2 மணிநேரத்துக்கு ரூ.13 லட்சம்; மீனா பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்!!
சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. இதை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் சிறுவயதிலேயே பிரபலமானார்.
meena
பின்னர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 90களில் முன்னணி நடிகையாக மாறினார் மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார்.
பின்னர் எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தின் விஜய்யின் மகளாக நடித்தார். இதனிடையே மீனாவின் கணவர் 2022-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா சிறிது காலம் வெளியே வராமல் இருந்த அவர் தற்போது மீடியாவில் வர ஆரம்பித்திருக்கிறார்.
இந்த நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “ நடிகர்கள் முன்பெல்லாம் பேட்டி கேட்டால், அந்த ஸ்டூடியோவில் இருப்பேன் வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது பேட்டி கேட்டால் எவ்வளவும் பணம் தருவீங்க என்று பேரம் பேசுகின்றனர்.
Meena
சமீபத்தில் ஒரு யூ டியூப் நிறுவனம் மீனாவிடம் பேட்டி எடுத்துள்ளது. அதற்கு எவ்வளவு மணி, எவ்வளவு தருவீங்க என கேட்டுள்ளார். அதற்கு அந்த சேனல் தரப்பில் 2 மணி நேரம் போதும் என்று கூறியிருக்கிறார்கள். 2 மணி நேரம் என்றால் 13 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மீனா கூறியிருக்கிறார்.
Meena
அந்த யூ டியூப் நிறுவனமும் தனது சேனல் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ரூ.13 லட்சம் கொடுத்து அவரை பேட்டி எடுத்துள்ளனர். ஒரு பேட்டிக்கு இவ்வளவு பணம் கேட்பதா என்று பயில்வான் கேள்வி எழுப்பி உள்ளார்.