Arun Vijay: பெட்டிக்கடையில் பார்த்த அந்த சின்னஞ்சிறு சிரித்த முகம்! விட மனமில்லாமல் பிடித்து கொண்ட அருண் விஜய்
பெட்டிக்கடையில் பார்த்த சின்னஞ்சிறு சிரித்த குழந்தையின் முகத்தை பிடித்தபடி, எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட அந்த போட்டோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
arun vijay
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய நட்சத்திர குடும்பமாக பார்க்கப்படும், விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்துடன் தமிழில் 1995-ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் படத்தில் அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து, பிரியம், கார்த்திருந்த காதல், கங்கா கௌரி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
Actor Arun Vijay
இவர் நடித்த சில படங்கள் வெற்றிபெற்றாலும் பல படங்கள் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வியால் துவண்டு கொண்டிருந்த அருண் விஜய் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது அஜித்துக்கு வில்லனாக இவர் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் தான். இந்த படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.
இந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்த அருண் விஜய் அதனை தக்க வைத்துக்கொள்ள தற்போது வரை கடுமையாக போராடி வருகிறார். மேலும் தொடர்ந்து தரமான கதைக்களத்தில் உருவாகும் படங்களையே நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் அருண் விஜய் நடித்த குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம், மிசன் சாப்டர் 1 போன்ற படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல் இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்து முடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம்... அருண் விஜய்க்கு மட்டும் அல்ல, இயக்குனர் பாலாவுக்கு தரமான கம் ஃபேக்காக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் போது, ஷூட்டிங் எடுக்கப்பட்ட சில புகைப்படத்தை தான் அருண் விஜய் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பேட்டி கடையின் முன்பு அருண் விஜய் நிற்கும் நிலையில்... அவர் அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தையில் அழகிய சிரித்த முகத்தை தன் இரு கரங்களிலும் அள்ளி கொள்ளும் வகையில் உள்ளது. குழந்தைகள் மீது எந்த அளவுக்கு அருண் விஜய் பாசம் காட்டுபவர் என்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.