அட்சய திருதி எதிரொலி.. ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சி நகைப்பிரியர்கள்.!
அட்சய திருதியை நாளான இன்று ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக உயர்ந்ததால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்தனர்.
Akshaya Tritiya
அட்சய திருதியையில் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. அதன்படி இந்தாண்டு இன்று அதிகாலை 4.17 மணிக்கு அட்சய திருதியை திதி தொடங்கி நாளை மதியம் 2.50 மணிக்கு முடிகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
Gold Rate
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-ஆக விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: அட்சய திருதி அதுவுமா எகிறிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
Akshaya Tritiya Gold Rate
பின்னர் அடுத்த சில மணிநேரங்களிலேயே 2வது முறையாக தங்கம் கிராம் ரூ.45 உயர்ந்தது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,640-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,705-ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்துள்ளது அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க இருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Chennai Accident: ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் பலியான 10ம் வகுப்பு மாணவன்.. சென்னையில் நடந்த சோகம்.!