Ramya Pandian: ரம்யமான அழகில்... மௌன புன்னகையை உதிர்க்கும் ரம்யா பாண்டியன்! சல்வாரில் கியூட் போட்டோ ஷூட்!
நடிகை ரம்யா பாண்டியன், சல்வார் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்கள் பலர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நடிக்க வந்தவர் தான், ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியன் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான அருண் பாண்டியனின் உடன் பிறந்த அண்ணனின் மகள். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலியாக இருந்தாலும், தொழில் ரீதியாக பல வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து இவரின் குடும்பம் செட்டில் ஆகி விட்டனர்.
சிறு வயதில் இருந்தே... சென்னையில் படித்த ரம்யா பாண்டியனுக்கு, தன்னுடைய சித்தப்பா நடிகர் என்பதாலோ என்னவோ, இவருக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
எனவே கல்லூரியில் படித்து கொண்டே, திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். தன்னுடைய கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இதை தொடர்ந்து டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும்... அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே கவனம் பெறாத நடிகையாகவே இருந்தார் ரம்யா.
இதை தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் சமூக கருத்துடன் கொண்ட படமாக இயக்கிய ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக இவர் நடித்த... ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். இந்த படம் சரியாக ஓடாததால் மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
அந்த நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், தன்னுடை இடையழகை காட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் , ஒரே நாளில் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது. இதன் பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு அசத்தினார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புன்னகையை உதிர்க்கும் அழகு சிரிப்புடன் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.