MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வாஸ்து படி காலையில் எழுந்தவுடன் இந்த 3 பார்க்காதீங்க.. இல்லையெனில் வறுமை உங்களை வாட்டி வதைக்கும்!

வாஸ்து படி காலையில் எழுந்தவுடன் இந்த 3 பார்க்காதீங்க.. இல்லையெனில் வறுமை உங்களை வாட்டி வதைக்கும்!

காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.இதனால் நாள் முழுவதும் நன்றாக கழியும் மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதமும் எப்போது இருக்கும்.

2 Min read
Kalai Selvi
Published : Jul 02 2024, 09:58 AM IST| Updated : Jul 02 2024, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் நாள் நன்றாக ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வெற்றியும் அடையப்படுகிறது. 

26

ஆனால், சில சமயங்களில் வீட்டை விட்டு வெளியேறும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது. இது உங்கள் மனநிலையைக் கெடுத்துவிடும். காரணம், காலையில் எழுந்தவுடன் சில வேலைகளை செய்வதால் தான் இதுபோன்று நிகழ்கிறது என்று வாஸ்து கூறுகிறது.

36

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்ப்பது அசுப பலன்களை தரும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, நிதி நெருக்கடியும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, வாஸ்துபடி எந்தெந்த விஷயங்களை காலையில் பார்க்கக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

46

நிழல்களை பார்க்க வேண்டாம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் எழுந்தவுடன் உங்கள் சொந்த நிழல் அல்லது மற்றவரின் நிழல்களை பார்க்க கூடாது. மேலும் சூரிய தரிசனத்தின் போது மேற்குத் திசையில் நிழலே பார்த்தால் அது அசுப பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. எனவே, தீய விளைவுகளை தவிர்க்க நிழலை பார்ப்பதை தவிர்க்கவும்.

இதையும் படிங்க:  வீடு கட்டும் போது வெள்ளி நாகம் ஏன் வைக்க வேண்டும் தெரியுமா..? வாஸ்து சொல்வது இதுதாங்க!

56

அழுக்கான பாத்திரங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் கிடக்கும் அழுக்கான பாத்திரங்களை எப்போதும் இரவில் கழுவினால்,  அன்னபூரணி அருள், அன்னலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். மேலும் எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் நுழைய முடியாது. ஆனால் இரவில் பாத்திரங்களை கழுவாவிட்டால் நீங்கள் இழந்தவுடன் அவற்றைப் பார்த்தால் உங்கள் நாள் முழுவதும் கெட்டுப் போகலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வறுமை உங்களை விட்டு விலகாது. எனவே, பாத்திரங்களை இரவிலே கழுவி விடுங்கள்.

இதையும் படிங்க:  கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

 

66

கண்ணாடி பார்க்க கூடாது: காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தை பார்ப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை செய்யவே கூடாது. ஏனென்றால் இதனால் அனைத்து எதிர்மறை சக்திகளும் உங்களுக்குள் நுழையும். இதனால் உங்கள் நாள் முழுவதும் வீணாகிவிடும் 
மற்றும் வறுமை உங்களை விட்டு விலகாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved