கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!
ஜோதிட சாஸ்திரம் படி உப்பானது, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை துரத்தவும், வீட்டிற்கு செல்வம் அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
salt pariharam for money
ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீட்டில் நிலைத்திருக்கவில்லை என்றால், கண்டிப்பாக மன வேதனை அளிக்கும். இந்த நிலைமையை உங்களுக்கும் இருக்கிறதா..? அப்படியானால் உங்கள் வீட்டில் பணம் நிலைத்திருக்க, வாஸ்துபடி, உப்பை கொண்டு சில பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
salt pariharam for money
பொதுவாகவே, உப்பானது உணவில் மட்டும் தான் சேர்க்கப்படும். ஆனால், உப்பு ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..? அதாவது ஜோதிட சாஸ்திரம் படி உப்பானது, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை துரத்தவும், வீட்டிற்கு செல்வம் அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
salt pariharam for money
எனவே, உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும். சரி வாங்க.. இப்போது பணவரவுக்காக வாஸ்துபடி உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
salt pariharam for money
பணம் அதிகம் செலவாகாமல் இருக்க: உங்கள் வீட்டில் பணம் வந்ததும் உடனே செலவழிந்து விடுகிறதா? அப்படியானால், வீட்டின் மூலைகளில் சிறிதளவு கல் உப்பை வையுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விரட்டி அடிக்கப்படும் மற்றும் பணம் அதிகம் செலவழியாது.
இதையும் படிங்க: நீங்கள் கேட்டதை கொடுக்கும் கல் உப்பு பரிகாரம்... 48 நாளுக்குள் நினைத்தது நடக்கும்.. நம்புங்க!
salt pariharam for money
வீட்டில் பணம் தங்க: வீட்டில் பணம் நிலைத்திருக்க ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் ஒரு ஸ்பூன் கல் உப்பை போட்டு அதை உங்கள் பர்சில் வைக்கவும். இது யாரும் பார்க்காதபடி ரகசியமாக வைத்து வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த உப்பை நீங்கள் 10 நாள் கழித்து மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணம் வீட்டில் தங்கும்.
இதையும் படிங்க: மறந்தும் உப்பை மட்டும் கடனாக கொடுக்க கூடாதாம்.. மீறினால் வீட்டில் தரித்தரம் தாண்டவம் ஆடும் தெரியுமா?
salt pariharam for money
வீட்டில் பண பிரச்சனை நீங்க: பண பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் கல்லுப்பை போட்டு, அதில் 5 கிராம்பு போடுங்கள். பின் அதை வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணம் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, பணம் அதிகம் சேரும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D