விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜுனா.. இவர் யாருடைய மருமகன் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயீடுவிங்க.!
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜினாவுக்கு அக்கட்சியின் துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Viduthalai Chiruthaigal Katchi
சமீபகாலத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனம் தான். கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும் இவரே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.
Thirumavalavan
வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் ஆதவ் அர்ஜுனாவை மேடையேற்றி அவருக்கு பாராட்டுகளைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதனையடுத்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுனனுக்கு துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
Aadhav Arjuna
யார் இந்த ஆதவ் அர்ஜுனா?
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடிய ஆதவ் அர்ஜுன் மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
Deputy General Secretary Aadhav Arjuna
முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்று இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார் ஆதவ் அர்ஜூன். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் இந்த ஆதவ் அர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விசிக-வின் சார்பில் பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவைக் களமிறக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.