- Home
- குற்றம்
- பட்டப்பகலில் அலறிய சென்னை! ரவுடியை சுத்துப்போட்ட கும்பல்! நடுரோட்டில் ஓட ஓட! தெறித்து ஓடிய பொதுமக்கள்!
பட்டப்பகலில் அலறிய சென்னை! ரவுடியை சுத்துப்போட்ட கும்பல்! நடுரோட்டில் ஓட ஓட! தெறித்து ஓடிய பொதுமக்கள்!
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி மௌலி, மந்தைவெளி ரயில் பாலம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் ரவுடி மௌலி
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவுடி மௌலி (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மௌலி இருசக்கர வாகனத்தில் மந்தைவெளியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் மந்தைவெளி ரயில்வே பாலம் அருகே வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தனர்.
பட்டப்பகலில் கொலை
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மௌலி மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மௌலி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது தெரியவந்தது.
முன்விரோதம் காரணம்
அதாவது மௌலியும், மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி கௌதம்(19), விஜயகுமார் @ பிக் ஷோ(21), சபரி, மணி, புருஷோத்தமன் ஆகியோர் ஏரியாவில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பின்னர் மௌலிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்த நிலையில் மௌலி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளியை பிடிக்க தனிப்படை
கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான முழு விவரம் தெரியவரும்.

