MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!

நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!

படப்பை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கங்காதரன் என்பவர் தனது மனைவி நந்தினியை பொது இடத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். 12 வருட திருமண வாழ்க்கையில் 2 மகன்கள் உள்ள நிலையில், இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 25 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மனைவி மீது சந்தேகம்
Image Credit : Asianet News

மனைவி மீது சந்தேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன்(36). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கிரிஷ்குமார் (9), ஹரிசரண் (7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேகம் என்ற பேய் புகுந்தது. அதாவது கங்காதரனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

24
கணவன்-மனைவி இடையே தகராறு
Image Credit : Asianet News

கணவன்-மனைவி இடையே தகராறு

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், சாலமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நந்தினி சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த கங்காதரன், மனைவியை தேடி சாலமங்கலத்திற்கு சென்று அங்கு நந்தினியுடன் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தாக்கியதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
34
படப்பை காவல் நிலையத்தில் புகார்
Image Credit : Asianet News

படப்பை காவல் நிலையத்தில் புகார்

அப்போது கங்காதரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் படப்பை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
கணவர் கைது
Image Credit : ANI

கணவர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் தாலி கட்டிய மனைவியை பொதுமக்கள் மத்தியில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
காவல் நிலையம்
மனைவி
கணவன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக MLA சுதர்சனத்தை கொன்ற 'பவாரியா' கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி!
Recommended image2
டார்ச்சர் தாங்க முடியல.. திருமணத்துக்கு வற்புறுத்திய 60 வயது பெண்ணை தீர்த்துக் கட்டிய காதலன்!
Recommended image3
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
Related Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved