MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!

கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Nov 25 2025, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வடகிழக்கு பருவமழை
Image Credit : Google

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

26
இந்திய வானிலை ஆய்வு மையம்
Image Credit : Google

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23ம் தேதியன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும், இதன் காரணமாக 25ம் தேதியன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெறக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related image2
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
36
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Image Credit : Google

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

இன்று கனமழை - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கனமழை - தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27ம் தேதி கனமழை - தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
Image Credit : our own

மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடரை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து ஆய்வு செய்தார்கள்.

56
 மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்
Image Credit : our own

மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்

மேலும், 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இடைஇடையே மணிக்கு 55 கிமீ வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். 27 முதல் 28 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இடைஇடையே மணிக்கு 65 கிமீ வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். எனவே, மீனவர்கள் 24 முதல் 28 வரை கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

66
விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை

ஆழ்க்கடலில் மீன்பிடிப்புப் பணியில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை முன்னறிவிப்பின் காரணமாக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்னனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு அணி நிலைநிறுத்தப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
புதிய அவதாரம் எடுக்கும் ஓபிஎஸ்.. டிச.15ல் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தப் போறாராம்..
Recommended image3
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Related Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் இத்தனை மணிநேரம் மின்தடையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved