MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!

பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!

தர்மபுரியில், கள்ளக்காதலை கைவிட்ட தனது அக்காளின் மனைவியை, அவரது கணவர் அனுமந்தன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். உல்லாசத்திற்கு வர மறுத்ததால் ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 12 2026, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்துள்ள ஒசஅள்ளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகளும் உள்ளனர். பிரபு பெங்களூருவில் தங்கி கட்டிட கான்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாளின் கணவர் அனுமந்தன் (40). கட்டிட கான்டிராக்டர்.

25
Image Credit : Asianet News

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் அவரது அக்காள் கணவரான அனுமந்தன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பெங்களூருவில் தங்கி உள்ள பிரபு மாதத்தில் ஓரிருமுறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து கள்ளக்காதலை கைவிட்ட ராஜேஸ்வரி அனுமந்தனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். 

Related Articles

Related image1
கொஞ்சம் உஷாராக இருங்க மக்களே.! ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Related image2
தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
35
Image Credit : Asianet News

அனுமந்தன் பகலிலேயே உல்லாசமாக இருக்க பலமுறை அழைத்தும் அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன் ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் ராஜேஸ்வரி நேற்று மதியம் தனது மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று விட்டுஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கடைசியாக ஒருமுறை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

45
Image Credit : Google

இதையடுத்து ராஜேஸ்வரி வீட்டிற்கு அருகில் உள்ள தளவாய்அள்ளி பகுதியில், கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அனுமந்தன் ராஜேஸ்வரியை கீழே தள்ளி தலை மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்து குழியில் தள்ளி டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டியுள்ளார். இதனிடையே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்துள்ளனர்.

55
Image Credit : ANI

சிறிது நேரம் கழித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கு குழிக்குள் மண் கொட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனுமந்தனை பிடித்து விசாரணை நடத்திய போது ராஜேஸ்வரியை கொலை செய்து மண்ணை கொட்டி புதைத்துவிட்டதாக கூறினார். பின்னர் ராஜேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அனுமந்தனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது எங்களது கள்ளக்காதல் விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவந்ததால் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். பலமுறை அழைத்தும் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கொலை செய்ததாக கூறினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
Recommended image2
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Recommended image3
கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!
Related Stories
Recommended image1
கொஞ்சம் உஷாராக இருங்க மக்களே.! ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved