- Home
- குற்றம்
- 29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
29 வயது நிதினுக்காக 45 வயது சந்தியா செய்த வேலையை பார்த்தீங்களா! போலீசிடம் சிக்கியது எப்படி?
பாலக்காட்டில் மூதாட்டி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் அது கொலை என தெரியவந்தது. விசாரணையில், பணக்கஷ்டத்தில் இருந்த கள்ளக்காதலனுக்காக, தங்கச் சங்கிலி தராத தாயை அவரது மகளே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமானது.

தாயை கொலை செய்த மகள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை அடுத்துள்ள முண்டூரைச் சேர்ந்த தங்கமணி. இவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. முதலில் அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கமணி கழுத்தில் தங்க சங்கிலி காணாமல் போயிருப்பது அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் தங்கமணியின் மகள் சந்தியாவிடம் (45) போலீசார் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
கள்ளக்காதலனுக்காக கொலை
அதாவது கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்த சந்தியாவுக்கு, அந்த பகுதியில் வசிக்கும் நிதின் (29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நிதினுக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவி செய்ய விரும்பிய சந்தியா தனது தாயிடம் அவரது தங்க சங்கிலியை கேட்டுள்ளார். இதற்கு தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்தியா தனது தாயை கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கமணி உயிரிழந்தார். பின்னர் சந்தியாவும், நிதினும் சேர்ந்து அவர் தவறி விழுந்து உயிரிழந்தது போல நாடகமாடியுள்ளனர். இதையடுத்து சந்தியா மற்றும் நிதினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

