MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!

கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!

கோவையில் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். குனியமுத்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Nov 29 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையில் பணிக்கு சென்றால் மாலை அல்லது இரவு நேரங்களில் வருவது தான் வழக்கம். ஆகையால் பெரும்பாலும் பூட்டியே இருக்கும். ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆட்கள் இருப்பார்கள்.

24
Image Credit : Asianet News

இந்நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு! புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த உதவி கமிஷனர்! சென்னையில் அதிர்ச்சி!
Related image2
சனிக்கிழமை விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!
34
Image Credit : our own

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

44
Image Credit : our own

இந்நிலையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் குனியமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்த நிலையில் 3 கொள்ளையர்கள் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். வலியால் துடித்த அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கோயம்புத்தூர்
காவல்துறை துப்பாக்கிச் சூடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
Recommended image2
பட்டப்பகலில் பள்ளி சென்ற ஆசிரியை வெட்டிக் படுகொலை! சரணடைந்த அஜித்குமார்! நடுங்க வைக்கும் பின்னணி?
Recommended image3
பிரபல பான்மசாலா உரிமையாளரின் மருமகள் திடீர் தற்கொலை! இதுதான் காரணமா? சிக்கிய கடிதம்!
Related Stories
Recommended image1
உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு! புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த உதவி கமிஷனர்! சென்னையில் அதிர்ச்சி!
Recommended image2
சனிக்கிழமை விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved