- Home
- உலகம்
- சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பள்ளிக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒருவர் நடடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டனர். 18 வயது இளைஞர் ஒருவர் எம்-4 துப்பாக்கியால் சுட்டார். அந்த நபரின் சகோதரி அதே பள்ளியில் படித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியைக் கண்டித்த ஆசிரியரைத் தேடிக்கொண்டு இருந்தார். சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சீல் வைக்கப்பட்டு, முழுப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பள்ளிக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஒரு பாதுகாப்பு காவலர், தாக்குதல் நடத்தியவர் பள்ளி முதல்வரையும் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தார். சிறப்புப் படைகள், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. தாக்குதல் நடத்திய நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது அடையாளம் தெரியவில்லை. போலீசார் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.
தாக்குதலுக்கு முன்பு, பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருப்பதாகவும், அவரது தாயாருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச் சூட்டின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளியை விட்டு ஓடிக்கொண்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர் எத்தனை மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தார் என்பது தெரியவில்லை.
மற்றொரு சம்பவமாக இன்று காலை கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஒரு வீட்டிற்குள் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டுள்ளார்
