முதல்வர் ஸ்டாலினின் தடாலடி அறிவிப்பால் செம்ம ஹேப்பியான சிம்பு பட தயாரிப்பாளர்... ஏன் தெரியுமா?
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியான ‘மிக மிக அவசரம்’ பட தயாரிப்பாளரும், தற்போது சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துக் கொண்டிருப்பவருமான சுரேஷ் காமாட்சி தன்னுடைய முகநூல் பக்கத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் பயணங்களின் போது பாதுகாப்பு பணிக்காக சாலையோரம் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது சந்திக்கும் பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏராளம்.
இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் பெண் காவலர்கள் படும் சித்திரவதைகளை அப்பட்டமாக எடுத்துரைத்த திரைப்படம் ‘மிக மிக அவசரம்’. இந்த படத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பெண் காவலரின் நிலை ஏதார்த்தமாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததோடு, கலங்கவும் வைத்தது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இனி சாலையோர பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை ஈடுபடுத்தக்கூடாது என டிஜிபி திரிபாதி அனைத்து காவல்நிலையங்களும் உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியான ‘மிக மிக அவசரம்’ பட தயாரிப்பாளரும், தற்போது சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துக் கொண்டிருப்பவருமான சுரேஷ் காமாட்சி தன்னுடைய முகநூல் பக்கத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவில், பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது... அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது... ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம். ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.
பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்... டிஜிபி அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும் படத்தை வெளியிட்ட #லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பி ஆர் ஓ A. ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.