MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மயில்சாமி இறந்தபோது என்ன நடந்தது இது தான்..! தவறான தகவல்களால் வேதனையோடு பேசிய மகன்..!

மயில்சாமி இறந்தபோது என்ன நடந்தது இது தான்..! தவறான தகவல்களால் வேதனையோடு பேசிய மகன்..!

மயில்சாமி இறந்தது குறித்து பல்வேறு வதந்திகள், வெளியானதை  தொடர்ந்து அவரின் மகன் யுவன் தற்போது செய்தியாளரை சந்தித்து, தந்தையின் இறப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார். மேலும் தந்தை பற்றி எவ்வித தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

3 Min read
manimegalai a
Published : Feb 23 2023, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த மயில்சாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு (பிப்ரவரி 19ஆம் தேதி)  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.  இவருடைய திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய மகன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
 

28

இந்த சந்திப்பின்போது, தன்னுடைய தந்தை மரணம் அடைந்ததிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக தங்களுக்கு உறுதுணையாக இருந்த தந்தையின் நண்பர்கள், போலீசார், மீடியாக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது! ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து!

38

இதைத்தொடர்ந்து பேசிய மயில்சாமியின் மகன், தன்னுடைய தந்தை இறந்து இரண்டு நாட்களுக்கு பின்பு தான் செல்போனை எடுத்துப் பார்த்ததாகவும், அதில் தந்தையின் மரணம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி இருந்தது.  சில youtube தளங்கள் தன்னுடைய தந்தை டீ குடித்துக் கொண்டிருக்கும் போது இறந்து விட்டதாகவும், கோவிலில் இருக்கும் போது இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் முதலில் தந்தைக்கு என்ன நடந்தது என்பதை கூறுகிறேன்.
 

48

18ஆம் தேதி தன்னுடைய தந்தை டப்பிங் பணியை முடித்துவிட்டு வந்ததும், மகா சிவராத்திரி அன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு நான், என்னுடைய தந்தை, என்னுடைய தாயார் கிளம்பி சென்றோம். செல்லும் வழியிலேயே சாப்பிட்டு விட்டு தான் கோவிலுக்கு சென்றோம். அங்கு சிறிது நேரம் என் தந்தை இருந்தார். அப்போது சிவமணிக்கும் போன் செய்து என் தந்தை வர வைத்தார்.  தந்தை இதய நோயாளி என்பதால், சிவமணியே நீங்கள் வீட்டிற்கு கிளம்பி சென்று ஓய்வெடுக்கும் படி கூறினார். 

தனுஷின் பெற்றோரை இப்படித்தான் நடத்தினார்களா ரஜினியின் குடும்பம்? வைராக்கியதோடு வீடு கட்டியதன் பின்னணி!
 

58

வீட்டிற்கு நாங்கள் வந்த பின்னர், அதிகாலை நேரத்தில் தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிடலாமா என சொன்னார். நானும் என் தந்தையும் சாப்பிட்டோம். சாப்பிட்ட உடனே, உணவு நெஞ்சிலையே இருப்பது போல் இருக்கிறது என கூறினார். அவருக்கு சாப்பாடு செரிக்கவில்லை என்றால் வெந்நீர் குடிப்பார். எனவே சுடுதண்ணீர் கொடுத்தேன். தண்ணீர் குடித்துவிட்டு தூங்கும்படி கூறிவிட்டு... நானும் மாடியில் உள்ள என்னுடைய அறைக்கு சென்று படுத்தேன்.
 

68

10 நிமிடத்தில் என்னுடைய தாயார் வந்து அப்பா மூச்சு விட கஷ்டப்படுவதாக கூறினார். நான் சென்று பார்த்தபோது, அவர் சிரமத்துடன் மூச்சுவிட்டார் உடனடியாக காரில் அவரை ஏற்றிக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கிளம்பினேன். தெருமுனைக்கு செல்லும் போதே... அவர் என் மீது சரிந்து விழுந்து விட்டார். அவரை பிடித்துக்கொண்டு காரை ஓட்ட சிரமமாக இருந்ததால், கரை ஓரமாக பார்க் செய்துவிட்டு, ஆட்டோவில் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

லோ நெக் கவர்ச்சியில்.... கிழிந்த உடையில் அப்பட்டமாக அந்த இடத்தை காட்டி அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!
 

78

அப்போது அங்கு இருந்த மருத்துவர்கள் தந்தையை பரிசோதித்து விட்டு அவர் இறந்ததாக தெரிவித்தனர். எனினும் தன்னுடைய தந்தை இறக்கவில்லை என்ற ஒரு நம்பிக்கையில், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போன் செய்து விட்டு, உடனே தன்னுடைய தந்தையை ஆம்புலன்ஸ் மூலம் அங்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் அங்கும் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து இந்த தகவல் வெளியாகி வெளியானது இதுதான் உண்மையில் நடந்தது என பேசி உள்ளார்.
 

88

மேலும் தன்னுடைய தந்தை விட்டு சென்ற பணிகளை நானும் என் தம்பியும் இணைந்து செய்வோம். என்னுடைய தந்தையின் செல்போனில் எப்போதும் ஸ்விட்ச் ஆப்பில் இருக்காது. நானும் என்னுடைய தம்பியும் அதனை உபயோகிப்போம் எங்களால் முடிந்தவரை பலருக்கு உதவி செய்வோம் என தெரிவித்துள்ளார். அதே போல் தயவு செய்து தந்தை பற்றிய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், பார்பதற்க்கே வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.

'சந்திரமுகி 2' ஷூட்டிங் ஸ்பாட்டில்... வடிவேலுவுடன் ரொமான்ஸ் பண்ணும் ராகவா லாரன்ஸ்! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved