MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'எதிர்நீச்சல்' சீரியலில் அரங்கேறிய உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்! கதறி துடிக்கும் ஜனனி.. லேட்டஸ்ட் அப்டேட்!

'எதிர்நீச்சல்' சீரியலில் அரங்கேறிய உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்! கதறி துடிக்கும் ஜனனி.. லேட்டஸ்ட் அப்டேட்!

எதிர்நீச்சல் சீரியலின் TRP ரேட்டிங்கை ஏற்றுவதற்காக பல அதிரடியான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் நடக்க கூடாத சம்பவம் ஏதேனும் நடந்து விட்டதா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Nov 15 2023, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று , 'எதிர்நீச்சல்'. இந்த சீரியல் மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் TRP-யில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிலும் புதிய குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தியை பலர், குணசேகரன் கதாபாத்திரத்துடன் இவரை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை என்பதை ஓப்பனாகவே கூறி விமர்சித்து வருகிறார்கள்.

24

இந்நிலையில், தன்னுடைய தம்பிகளுடன் சேர்ந்து... திருவிழாவில் வைத்து எப்படியும் அப்பத்தாவை தீர்த்து கட்டினால் தான் சொத்து நம்ப கைக்கு வரும் என திட்டம் தீட்டுகிறார் குணசேகரன்.  இந்நிலையில் அப்பத்தா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி குண்டு வெடிப்புடன் முடிந்தது. அதில் குணசேகரன் ஏற்பாடு செய்த நபர்  இறக்க அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். 

முதன்முறையாக தன்னுடைய கேர்ள் பிரெண்டை அறிமுகம் செய்துவைத்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி

34

அதோடு அப்பத்தா தனக்கு சொந்தமான 40 சதவீத சொத்தை, பிரித்து சிலர் பெயரில் எழுதியதால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன், அவரை சமாதம் செய்வது போல் ஒரு டம்ளரில் பால் கொடுக்க, அதைக் குடித்த அப்பத்தா அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுகிறார். அவருக்கு என்ன ஆனது என குடும்பமே பதறி விடுகிறது. கதிர் மற்றும் ஞானம் உடனடியாக அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக காரில் ஏற்றி, எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல் உள்ளனர். மற்றொரு புறம், ஜனனி, சக்தி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் அப்பத்தாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44

இடையில் ஜீவானந்தம் போன் செய்து, அப்பத்தா உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். இதை தொடர்ந்து அப்பத்தா மற்றும் குணசேகரன் எங்கே போனார்கள் என தெரியாமல், கதிர் மற்றும் ஞானம் இருவரும் கண்ணீருடன் வீடு திரும்பிய நிலையில், தற்போது ஜனனி போலீஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை பார்க்க வேண்டும் என கேட்டு, ஏதோ ஒரு இடத்திற்கு சென்று பார்த்து, அங்கேயே கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி காட்டப்படுகிறது. காணாமல் போன அப்பத்தா, குணசேகரனுக்கு என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Shruti Haasan: பட்டு புடவையில்... காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved