அப்ப அப்ப இந்த மாதிரி பண்ணுங்க... டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தவர்களிடம் விக்கி வைத்த விசித்திர கோரிக்கை
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்களிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன், அப்ப அப்ப இந்த மாதிரி பண்ணுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த இவர் கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயரும் சூட்டி உள்ளனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த ஆண்டு தொடர்ந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கடந்த ஜனவரி மாதம் இவர் இயக்குவதாக இருந்த அஜித்தின் ஏகே 62 பட வாய்ப்பு இறுதியில் கைநழுவி சென்றது. இதற்கு அடுத்தபடியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ஹேக்கர்களின் இந்த செயலுக்கு அவர் இன்ஸ்டாகிராமில் அதிருப்தியும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... அங்கிள் என்னபார்க்க வரமாட்டிங்களா! ஏக்கத்தோடு கேட்ட குழந்தை.. உடனே வீடியோ காலில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட தனது டுவிட்டர் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதோடு ஹேக் செய்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் நிம்மதியாக இருந்தேன். ஹேக் செய்தவர்களுக்கு நன்றி, அப்ப அப்ப இந்த மாதிரி பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... watch : ஆர்யா கிராமத்து நாயகனாக மிரட்டும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் மாஸ் டீசர் இதோ