MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தங்கள் தரிசனம் கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி

தங்கள் தரிசனம் கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி

பொன்னியின் செல்வன் 2 படத்தின் அக நக பாடல் இன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷாவும், கார்த்தியும் தற்போது டுவிட்டரில் chat செய்துள்ளனர்.

2 Min read
Ganesh A
Published : Mar 20 2023, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதில் முதல் பாகத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24

அதற்கான அப்டேட்டுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன. முதலாவதாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அக நக என்கிற பாடலை இன்று மாலை வெளியிட உள்ளனர். இது இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவுக்கும், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாகும். இந்த பாடல் ரிலீஸ் ஆவதை புரமோட் செய்யும் விதமாக திரிஷாவும், கார்த்தியும் தற்போது டுவிட்டரில் chat செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

34

முதலில் கார்த்தி ‘இளையபிராட்டி…ஹாய்’ என டுவிட் செய்ய, இதற்கு நெடுநேரமாக திரிஷா பதிலளிக்காமல் இருந்து வந்தார். பின்னர் பொறுமையை இழந்த கார்த்தி, ‘என்ன பதிலே இல்லை’ என மற்றொரு டுவிட்டை போட்டார். இதையடுத்து ஆன்லைன் வந்த திரிஷா, ‘என்ன வாணர்குல இளவரசே?' என கேள்வி கேட்க, இதற்கு ‘தங்கள் தரிசனம்  கிடைக்குமா?’ என்று பதில் கேள்வி கேட்டிருந்தார் கார்த்தி.

44

இதையடுத்து, ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்' என கார்த்தியின் டுவிட்டுக்கு ரிப்ளை செய்திருந்தார் திரிஷா. உடனே சுதாரித்துக் கொண்ட கார்த்தி, ‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’ என வந்தியத்தேவனாக மாறி ஒரு கேள்வியை கேட்டார். 

இதற்கு ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா?’ என திரிஷா ரிப்ளை கொடுக்க, கார்த்தி பதிலுக்கு ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….’ எனக்கூறினார். இப்படி குந்தையாகவும், வந்தியத்தேவனாகவும் மாறி திரிஷாவும், கார்த்தியும் உரையாடிக்கொண்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)
திரிஷா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved