- Home
- Cinema
- ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
Tamil Song Secret : தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஒருவருக்காக எழுதிய பாடல் வரிகள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அப்பாடல் வரிகளை விஜய் படத்தில் பயன்படுத்தி ஹிட் பாடலை கொடுத்துள்ளார் யுகபாரதி.

Tamil Song Secret
தமிழ் சினிமாவில் ஒரு பாடல் வெற்றி பெறுவதற்கு இசை மட்டுமல்ல, அதற்கான வரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஏராளமான பாடல்களுக்கு பின்னால் திறமையான பாடலாசிரியர்களின் பங்களிப்பு உள்ளது. அந்த வகையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ஒரு பாடல் வரி முதலில் ஒரு படத்தில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் மற்றொரு படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல் வரிகள்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், ரவி மோகன் நடித்த ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தபோது, ஒரு காதல் பாடலுக்கான வரிகளை எழுதுமாறு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, யுகபாரதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்காக யுகபாரதி முதலில் “கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்” என்ற வரிகளை எழுதியிருந்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய, இன்னும் நவீனமான வார்த்தைகள் கொண்ட பாடல் வேண்டும் என்ற எண்ணத்தில், படக்குழு வேறு விதமான வரிகளை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிரிக்ஸை மாற்றிய யுகபாரதி
அதன்படி, யுகபாரதி “அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ” என்ற புதிய வரிகளை எழுதி கொடுத்தார். இந்தப் பாடலே பின்னர் படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், பயன்படுத்தப்படாமல் இருந்த “கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்” என்ற வரிகளை யுகபாரதி தனியாக வைத்திருந்தார். அப்போது விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘மதுர’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடல் வரிகளை தேடியபோது, அந்த வரிகளை யுகபாரதி அவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள்
பின்னர் அந்தப் பாடல் ‘மதுர’ படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை மது பாலகிருஷ்ணன் மற்றும் சாதனா சர்கம் ஆகியோர் பாடி இருந்தனர். ஒரு படத்தில் நிராகரிக்கப்பட்ட வரிகள், மற்றொரு படத்தில் இடம்பிடித்து சூப்பர் ஹிட் பாடலாக மாறியது தமிழ் சினிமாவின் சுவாரஸ்யமான பின்னணிக் கதைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு பாடலின் வெற்றி அதன் தரத்தை மட்டுமல்ல, அது சரியான இடத்திலும் சரியான சூழலிலும் பயன்படுத்தப்படுவதையும் பொறுத்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
