பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரின் மகனும் பங்கேற்கிறாரா?... கமலின் ஸ்பெஷல் பரிந்துரையாம்...!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் புதிதாக பிரபல நடிகர் ஒருவரின் மகன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரண், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும்
வெளியாகவில்லை.
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 3 சீசன்களிலும், 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நிகழ்ச்சி நடக்கும்.
ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்
என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கமலின் நண்பருமான நாசரின் இளைய மகன் அபிஹசன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் கமல் மகள் அக்ஷாராவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அபிஹசனின் நடிப்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு புகழ் மற்றும் பப்ளிசிட்டியோடு படவாய்ப்புகளும் கிடைக்கும். அதனால் கமல் ஹாசனின் சிறப்பு பரிந்துரையின் பேரில் நாசர் மகன் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது 4 போட்டியாளர்களை சேர்க்க கமலுக்கு அதிகாரம் இருக்கிறதாம். அதனடிப்படையில் அபிஹசனை கமல் ரெக்கமெண்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.