MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இம்முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டப் போவதில்லை... புரமோஷன் டூர் பிளானை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்

இம்முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டப் போவதில்லை... புரமோஷன் டூர் பிளானை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதற்கான புரமோஷன் டூர் பிளானை படக்குழு வெளியிட்டு உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Apr 16 2023, 07:37 AM IST| Updated : Apr 16 2023, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ரிலீஸ் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

24

அதன் ஒருபகுதியாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்

ஏப்ரல் 16 - கோவை
ஏப்ரல் 17 - சென்னை
ஏப்ரல் 18 - டெல்லி
ஏப்ரல் 20 - கொச்சி
ஏப்ரல் 22 - பெங்களூர்
ஏப்ரல் 23 - ஹைதராபாத்
ஏப்ரல் 24 & 25 - மும்பை
ஏப்ரல் 26 - திருச்சி
ஏப்ரல் 27 - சென்னை

இதையும் படியுங்கள்... நயனுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் ? 10 வேலைக்காரங்க இருந்தாலும் மிட் நைட்டில் செய்வாங்க! விக்கி சொன்ன சீக்ரெட்!

34

கடந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போது இதுபோன்று புரமோஷன் டூர் சென்ற படக்குழு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து புரமோஷனை தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்தனர். அப்படம் ரிலீஸ் ஆன பின்னர் கூட அவர்கள் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டவில்லை. இந்த முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மட்டும் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர்.

44

பொன்னியின் செல்வன் சோழர்களின் வரலாற்றை பேசும் படம். சோழர்களின் சொர்க்க பூமியாக இருந்தது தஞ்சாவூர் தான். அப்படி இருக்கையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டாமல் இருப்பதற்கு ஒரு செண்டிமெண்ட்டும் காரணமாக கூறப்படுகிறது.

அது என்னவென்றால், பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரேனும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் அவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடுமாம். இதன் காரணமாகவே அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பெரும்பாலும் அந்த கோவில் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்களாம். தற்போது பொன்னியின் செல்வன் படக்குழுவும் அந்த பயத்தால் தான் அங்கு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... புல்லரிக்கும் வரிகள்... ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல்! வீடியோ...

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
கார்த்தி (நடிகர்)
தஞ்சாவூர்
திரிஷா
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved