வேற லெவல் சம்பவம் வெயிட்டிங்... இப்பவே மதுரையை அதிர வைத்த சூர்யா ரசிகர்கள்...!
வேட்டி, சட்டையில் கையில் வாளுடன் நடந்து செல்லும் சூர்யாவின் போட்டோவை மதுரையில் உள்ள சூர்யா ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து தயாரித்திருந்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சூர்யா அடுத்தடுத்து 'வாடிவாசல்', பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40வது படத்தில் பிஸியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த சூர்யா, கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் இருந்து பாண்டியராஜ் இயக்கும் தன்னுடைய 40வது படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போல் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், சமீபத்தில் கையில் வாள் பிடித்து வீரநடை போடுகிற சூர்யாவின் சூப்பர் போட்டோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
வேட்டி, சட்டையில் கையில் வாளுடன் நடந்து செல்லும் சூர்யாவின் போட்டோவை மதுரையில் உள்ள சூர்யா ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
பார்வையிலே விலகிடும் தடையடா படைகளும் அஞ்சிடும் நடையடா சம்பவம் விரைவில்... #Suriya40 என்ற வாசகத்துடன் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.