அரசியலை தாண்டி அதிரடி... ரஜினி எடுத்த சூப்பர் முடிவு... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னை நம்பிய ரசிகர்களுக்காக மட்டும் அதிரடி திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
‘அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் ’, ‘போர் வந்தால் பார்த்துக்கலாம்’ என அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா? என கால் நூற்றாண்டுகளாக குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 12ம் தேதியோடு அரசியலுக்கு கதம் கதம் சொல்லிவிட்டார். இனி அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கில்லை, ரஜினி மக்கள் மன்றத்தை கலைக்கிறேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
இதற்கு முன்னதாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அரசியலுக்கு வருவதற்கு உறுதியாக இருந்ததாகவும், அப்படி கட்சி ஆரம்பித்தால் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது வரையிலும் முடிவு செய்து வைத்திருந்தேன் என ரஜினிகாந்த் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் கொரோனா 2வது அலை காரணமாக மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கையும், தன்னுடைய உடல் நிலையையும் கருத்தில் கொண்டே அரசியல் வேண்டாம் என முடிவெடுத்தேன் என அவர் பேசியதாக தகவல்.
மேலும் மக்கள் மன்றத்தை கலைக்காமல் வைத்திருந்தால், என்றாவது நான் அரசியலுக்கு வருவேன் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் இருக்கும், அதனால் தான் மக்கள் மன்றத்தை கலைக்க முடிவெடுத்தேன் என்றும் விளக்கமளித்தார் என்ற தகவலும் வெளியானது. சூப்பர் ஸ்டாரின் இந்த முடிவை அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் என பலரும் ஏற்றுக்கொண்டாலும், மூன்றாம் கட்ட பார்வையாளர்களாக இருந்தவர்களின் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது. பலரும் ரஜினி ரசிகர்களை ‘இது தான் உங்க தலைவரோட ஆன்மீக அரசியலா?’ என வம்பிழுக்கவும் ஆரம்பித்தனர். தலைவர் கட்சி ஆரம்பிப்பார் என காத்திருந்த ரசிகர்கள் பலரும் சொந்த உறவுகளே கேலி செய்யும் நிலைக்கும் ஆளாகினர்.
இந்நிலையில் தான் கட்சியும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னை நம்பிய ரசிகர்களுக்காக மட்டும் அதிரடி திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நலித்த ரசிகர்கள் குடும்பங்களுக்கு நேரடியாக உதவ ரஜினிகாந்த் ஒரு புது அறக்கட்டளை ஆரம்பிக்க உள்ளதாகவும், ஒரு கட்சி செய்யும் நற்பணிகளுக்கு மேல் கூடுதலாகவே தனது நேரடி மேற்பார்வையில் நற்பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவரே சொன்னதாகவும் சில ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.