MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருப்பதி லட்டு விவகாரம்.. "தலைவர்" சொன்ன நச் பதில் - அதை முன்பே கணித்த மாறன்!

திருப்பதி லட்டு விவகாரம்.. "தலைவர்" சொன்ன நச் பதில் - அதை முன்பே கணித்த மாறன்!

Rajinikanth : சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தினை கூறியிருக்கிறார்.

3 Min read
Ansgar R
Published : Sep 28 2024, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

கடந்த சில வாரங்களாகவே இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது திருப்பதி லட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தான் தவறுகள் இருப்பதாக, தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

அதாவது உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படும் பிரசாதம் தான் லட்டு. உண்மையில் உலக அளவில் மிகவும் பிரபலமான விஷயங்களில் திருப்பதி லட்டும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. இந்த சூழலில் தான் அதில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பும் மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது.
உண்மையில் இந்த விஷயம் நடந்த பிறகு நட்சத்திரங்கள் பலரும் லட்டு என்று சொல்லவே கொஞ்சம் தயங்குகிறார்கள் என்றே கூறலாம்.

ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

24
Pawan Kalyan

Pawan Kalyan

சில தினங்களுக்கு முன்பு கூட தனது "மெய்யழகன்" திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் கார்த்திக். ஹைதராபாத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கார்த்தியை நோக்கி "உங்களுக்கு லட்டு வேண்டுமா" என்று கேட்க, ஹைதராபாத்தில் லட்டுவைப்பற்றி பேசக்கூடாது. மிகவும் சென்சிட்டுவான டாபிக் அது என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே பேசி இருந்தார். 

அவருடைய அந்த வீடியோ பெரிய அளவில் வைரலான நிலையில், உடனடியாக பவன் கல்யாண் அதற்கு கடும் கோபமாக ஒரு பதிலை கூறியிருந்தார். அதில் நடிகர்கள் பொதுவெளியில் சனாதனம் பற்றி பேசும்பொழுது ஒன்றுக்கு நூறு முறை நன்கு யோசித்து பேச வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது என்று கூறியிருந்தார். ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் இந்த பதிவிற்கு உடனே பதிலளித்த நடிகர் கார்த்திக். அன்று நான் பேசியது தவறாக இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், திருப்பதி ஏழுமலையானின் பக்தனாக மரபுகளை மதிப்பவன் நான் என்றும் கூறியிருந்தார்.

34
Actor Karthi

Actor Karthi

ஒரு வழியாக கார்த்தியின் மீது இருந்த பிரச்சனை சரியான நிலையில், அவருடைய மெய்யழகன் திரைப்படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தான் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகிய இருவரையும் வம்புக்கு இழுக்கும் விதமாக சில பதிவுகளை பிரபல திரைப்பட விமர்சிகர் மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருந்தார். அதாவது இதுவே இந்த இடத்தில் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் நிச்சயம் அவர் எதற்காகவும் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். 

ஆனால் கார்த்தி இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டது தவறு, இதேபோலத்தான் நடிகர் சத்யராஜும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டார். காரணம் அப்போது அவருடைய பாகுபலி திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் வெளியாக இருந்தது என்று கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் இதுபோல உள்ள விஷயங்களை தலைவர் ரஜினிகாந்த போலத் தான் சமாளிக்க வேண்டும். எதை கேட்டாலும் தனக்கு தெரியாது என்று சொல்லி மழுப்பி விடுவார் என்று அவரையும் கலாய்த்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

44
Super Star Rajinikanth

Super Star Rajinikanth

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பேட்டி கண்ட செய்தியாளர்கள், உதயநிதி ஸ்டாலின் குறித்து கேட்ட பொழுது, சட்டென்று கோபப்பட்ட ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

அதேபோல மீண்டும் தற்பொழுது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வேட்டையன் திரைப்படம் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டது. இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் பற்றிய கேட்டதற்கு.. "சாரி நோ கமெண்ட்ஸ்" என்று ஒரே வார்த்தையில் நச்சென்று அவர் அந்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த சூழலில் சூப்பர் ஸ்டாரின் இந்த பதிலை முன்பே கணித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் என்று இணையவாசிகள் கூறிவருகின்றனர்.

ரஜினியை ஹீரோவாக்க கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை விற்ற நண்பர்! ராஜ் பகதூர் பற்றிய தகவல்கள்!

About the Author

AR
Ansgar R
சந்திரபாபு நாயுடு
பவன் கல்யாண்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved