போதைக்கு அடிமையாகிட்டேனா?... உண்மையை போட்டுடைத்த சூப்பர் சிங்கர் பிரகதி...!
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரகதி குடிக்கு அடிமையாகிவிட்டதாக செய்தி பரவி வந்தது. இதுகுறித்து தற்போது பிரகதி விளக்கமளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே செம்ம கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பிரகதி கையில் பீர் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. அப்போது டென்ஷனான ரசிகர்கள் நீங்கள் போய் இப்படி எல்லாம் செய்யலாமா? என அட்வைஸ் செய்தனர்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரகதி குடிக்கு அடிமையாகிவிட்டதாக செய்தி பரவி வந்தது. இதுகுறித்து தற்போது பிரகதி விளக்கமளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள்" என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். “இந்த செய்தி பற்றி விளக்கம் கேட்கவோ, ரிப்போர்ட் செய்யவோ என்னை யாரும் அணுக வேண்டாம். இது அந்த அளவுக்கு நமது நேரத்தையும் எனர்ஜியையும் செலவு செய்து செய்ய தகுதியானது அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.