MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : சிந்தாமணிக்கு விபூதியடித்துவிட்டு ரேகாவை தூக்க பிளான் போடும் முத்து... சிக்கலில் மனோஜ்..!

Siragadikka Aasai : சிந்தாமணிக்கு விபூதியடித்துவிட்டு ரேகாவை தூக்க பிளான் போடும் முத்து... சிக்கலில் மனோஜ்..!

Sirgadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை சிந்தாமணி திருப்பதியில் அடைத்து வைத்திருக்கும் விஷயம் முத்துவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 16 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sirgadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Sirgadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை சந்தித்து அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டிலேயே சாப்பிட்டுள்ளார். அப்போது மனோஜை தன்னுடன் தனிக் குடித்தனம் வந்துவிடுமாறு ரோகிணி சொல்ல, அதற்கு மனோஜ் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என கேட்கிறார். உடனே ரோகிணியும் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்ததோடு, தான் உன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர 5 லட்சம் செலவழித்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கொடுத்தால் டைவர்ஸ் கொடுக்கிறேன் எனவும் கூறிவிடுகிறார்.

Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரோகிணியின் கண்டிஷனை சொன்ன மனோஜ்
Image Credit : jiohotstar

ரோகிணியின் கண்டிஷனை சொன்ன மனோஜ்

ரோகிணி 5 லட்சம் கேட்டதால் அதை எப்படி ரெடி பண்ணுவது என்கிற குழப்பத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார் மனோஜ். அப்போது அங்கு வரும் விஜயா என்ன ஆச்சு என கேட்க, அப்போது தான் ரோகிணியை சந்தித்த விஷயத்தை சொல்கிறார். அதைக்கேட்டதும் விஜயா டென்ஷன் ஆனாலும், அவள் டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துவிட்டால் என்று மனோஜ் சொன்னதும் குஷியாகிவிடுகிறார். இருப்பினும் ரோகிணி போட்ட கண்டிஷனை கேட்டதும், அந்த பணத்தை நீ தான் எப்படியாவது கட்ட வேண்டும் என அண்ணாமலை கூறிவிடுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Related image2
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
35
ரேகாவை மீட்க போராடும் முத்து
Image Credit : jiohotstar

ரேகாவை மீட்க போராடும் முத்து

மறுபுறம் முத்துவுக்கு போன் போடும் சத்யா, ரேகாவை அவருடைய பெற்றோர் திருப்பதியில் கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். பின்னர் இது தொடர்பாக ஆலோசிக்க சத்யா வீட்டுக்கே செல்லும் முத்து, ரேகாவிடம் போன் போட்டு பேசுகிறார். அப்போது தன்னை எப்படியாவது அழைத்து செல்லுமாரு கண்ணீர்விட்டு அழுகிறார் ரேகா. அவருக்கு ஆறுதல் சொல்லும் முத்து, தான் சொன்னபடி செய்தால், உன்னை அங்கிருந்து அழைத்து வந்துவிடலாம் என கூறுகிறார். அதற்கு ரேகாவும் சம்மதிக்க, ஒரு திட்டம் தீட்டுகிறார் முத்து.

45
முத்து கொடுத்த ஐடியா
Image Credit : jiohotstar

முத்து கொடுத்த ஐடியா

ரேகாவிடம், நீ மயங்கி விழுந்தது போல் நடி, அப்போதான் உன்னை வீட்டில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள். அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததும் அங்கிருந்து நாங்கள் உன்னை காப்பாற்றிவிடுகிறோம் என கூறுகிறார். இதற்கு ஓகே சொன்ன ரேகா, மயக்கம் போட்டு விழுந்தது போல் நடிக்க, அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்த தகவல் சிந்தாமணியின் கணவருக்கு தெரியவர, அவர் சிந்தாமணிக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னதும், அவர் கணவரை சந்திக்க அவரது வீட்டுக்கே வருகிறார்.

55
உஷார் ஆன சிந்தாமணி
Image Credit : jiohotstar

உஷார் ஆன சிந்தாமணி

சிந்தாமணியிடம் ரேகா மயக்கம் போட்டு விழுந்த விஷயத்தை சொல்லி அவரது கணவர் ஃபீல் பண்ண, அதற்கு சிந்தாமணி, இதெல்லாம் முத்துவின் வேலையாக தான் இருக்கும் என யூகிக்கிறார். அவன் அவளை அங்கிருந்து தூக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். நீங்க முதலில் உங்க ஆளுங்களை அங்கு அனுப்புங்க என கூறுகிறார். அதற்கு ரேகாவின் தந்தை, நானே நேரில் செல்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து என்ன ஆனது? ரேகாவை முத்து தூக்கினாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Recommended image2
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Recommended image3
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Recommended image2
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved