சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் இரண்டாவது வருட திருமணநாள்..! மறக்க முடியாத மலரும் நினைவுகளின் புகைப்படம்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இன்று தன்னுடைய இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.
மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு முதல் திருமணம் தோல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது.
அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் குழந்தை வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்க்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாள் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா - விசாகன் ஜோடி இன்று, தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது.
சௌந்தர்யா கழுத்தில் தாலி கட்டும் போது கூட, வேத்தை மடியில் அமர வைத்து கொண்டு விஷங்கள் கட்டியது அவரை உயர்வாக பார்க்க வைத்தது.
மாப்பிள்ளையாக சும்மா ஜம்முனு விசாகன் கொடுத்த என்ட்ரி
சௌந்தர்யா திருமணத்தில், பட்டு வேஷ்டி சட்டையில் தனுஷ்
திருமணத்திற்கு பின்னர் அழகிய தருணங்களை அனுபவிக்கும் சௌந்தர்யா - விசாகன்
கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு
இந்த ரொமான்டிக் ஜோடி இன்று தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்
இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது