15 மாதங்கள் கழித்து முடியாததை முடித்த 'சூரரை போற்று'..பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் சாதனைக்கு சூர்யா தயார்?
சூர்யாவின் சூரரை போற்று படத்தை 15 மாதங்களுக்கு பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்காக மதுரையில் படம் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
soorarai pottru
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru).
soorarai pottru
கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம், கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
soorarai pottru
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்.
soorarai pottru
soorarai pottru : சூரரைப் போற்று (soorarai pottru) படத்தின் சிறப்பு காட்சிகள் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. கூட்டம் கூட்டமாக வந்து ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வந்தனர். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
soorarai pottru
தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக திரையரங்க உரிமையாளர்களோ ஓடிடி-யில் வெளியான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.
soorarai pottru
இந்த படத்தை வெளியிட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தாலும், கேரள திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தனர்.
soorarai pottru
இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ள சூரரை போற்று படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
soorarai pottru
இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று படத்தை 15 மாதங்களுக்கு பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்காக மதுரையில் படம் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..