மரத்தில் ஏறி கல்வி பயின்ற மாணவர்கள்..! சொந்த செலவில் போன் டவர் கட்டிக்கொடுத்த சோனு சூட்! வேற லெவல் சார் நீங்க!
கொரோனா பிரச்சனையில், சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த, பல்லாயிரம் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்து தன்னுடைய சமூக சேவையை துவங்கியவர் சோனு சூட்.
நாளுக்கு நாள், இவருடைய உதவிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அந்த வகையில் சமீப காலமாக, கொரோனா தாக்கத்தால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத குழந்தைகள், ஆன்லைன் மூலம் தான் கல்வி கற்று வருகிறார்கள்.
சில கிராம பகுதிகளில் சரியான நெட்ஒர்க் வசதி இல்லாததால், சில குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில்... உள்ள கிராமம் ஒன்றில் சுத்தமாக டவர் கிடைக்காததால் மாணவி ஒருவர் மரத்தில் ஏறி பாடங்களை கவனித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இத்தகவலை அறிந்த நடிகர் நடிகர் சோனுசூட் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் வகையில் மொபைல் டவர் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தார்.
அதற்கான தீவிர பணியிலும் இறங்கினார்.
sonu sood
அதன்படி தற்போது அந்த கிராம மாணவர்கள் கல்விக்காக தன்னுடைய சொந்த செலவில் போன் டவர் ஒன்றை நிறுவியுள்ளார்.
பின்னர் வீடியோ காலிலும் வந்து, இனி மரத்தில் ஏறி படிக்க வேண்டிய அவசியம் இல்லை என தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சோனு சூட் மனித நேயத்தைப் பாராட்டி ஐ.நா சிறப்பு விருதினை வழங்கி கவுரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடிகர் லியொனார்ட்டி, நடிகை ஏஞ்சலினா ஜுலி, விளையாட்டு வீரர் டேவிட் பொக்காம் போன்ற சிலர் மட்டுமே பெற்ற ஐ.நாவின் சஸ்டைனபள் டெவலெமெண்ட் எனும் சிறப்பு விருது சோனுசூட்டு சமீபத்தில் பெற்றுக்கொண்டார். அப்போது தொடர்ந்து தன்னுடைய சேவைகள் இருக்கும் என கூறியுள்ளார்.