MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!

பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!

தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமை கொண்ட இவருக்கு சோபன் பாபு கூறிய விஷயம் அப்படியே நடந்ததாக தெரிவித்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Feb 07 2025, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரகாஷ் ராஜ்

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரகாஷ் ராஜ்

தென்னிந்திய சினிமாவல் சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுத்து விடுவார். குறிப்பாக வில்லனாக நடிப்பதில் இவரை, மிஞ்ச ஆளே கிடையாது என்பது போல், நடிப்பில் அசுர தனத்தை வெளிப்படுத்த கூறியவர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அடிக்கடி தானாக சில சர்ச்சையான விஷயங்களை பேசி பிரச்சனையில் சிக்கி கொள்வார்.

25
அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் பிரகாஷ் ராஜ்:

அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் பிரகாஷ் ராஜ்:

அனைவரிடமும் அன்பாக பழக கூடிய பிரகாஷ் ராஜுக்கும், நடிகர் சோபன் பாபுவிற்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. பிரகாஷ் ராஜ் அப்போதுதான் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருந்தார். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாராம். சோபன் பாபு நடித்த 'தொரபாபு' படத்தில் பிரகாஷ் ராஜுக்கு 1995 இல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் சண்டைக் காட்சியொன்றில் பிரகாஷ் ராஜ் சோபன் பாபுவை நோக்கி ஆவேசமாக வருவது போல் காட்சி இருந்ததாம்.

34 வயதாகியும் முரட்டு சிங்கிள்; திருமணம் பற்றிய கேள்விக்கு ரெஜினாவின் எதிர்பாராத பதில் !
 

35
பிரகாஷ் ராஜ் பற்றி கூறிய தகவல்

பிரகாஷ் ராஜ் பற்றி கூறிய தகவல்

இதை பார்த்து, சோபன் பாபு 'கொஞ்சம் நிதானமாக இருங்கள் பிரகாஷ்.. ஏன் மிகவும் ஆவேச படுகிறீர்கள். இது நடிப்பு மட்டுமே' என்று அன்பாக எச்சரித்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியபோது சோபன் பாபு கூறிய ஒரு வார்த்தையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என பிரகாஷ் ராஜ் இப்போது பகிர்ந்துள்ளார்.
 

45
சோபன் பாபு கூறிய அறிவுரை

சோபன் பாபு கூறிய அறிவுரை

அதாவது பிரகாஷ் ராஜ் சோபன் பாபுவிடம்  'நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை பார்க்க வருவேன்' என கூறியுள்ளார். அதற்க்கு சோபன் பாபு சிரித்துக்கொண்டே, 'நீங்கள் என்னை வந்து சந்திக்க மாட்டீர்கள், ஏனென்றால் அந்தளவுக்கு பிஸியாகிவிடுவீர்கள் 2 வருடங்களுக்குப் பிறகு' பாருங்கள் என்றாராம்.

கல்யாணம் ஆனாலும் வாழ்க்கையை ஆரம்பிக்கல; சாக்ஷி அகர்வால் பகிர்ந்த பர்சனல்!
 

55
சோபன் பாபு கணித்தது நடந்தது:

சோபன் பாபு கணித்தது நடந்தது:

'குருவே, அன்று நீங்கள் இப்படிக் கூறினீர்கள். நீங்கள் சொன்னதுபோலவே நான் உங்களைச் சந்திக்க முடியவில்லை. ஒரு கலைஞனாக, அவர் சொன்னது போல் மிகவும் பிஸியாகிவிட்டேன்' என தெரிவித்துள்ளார். தன்னை பற்றி சரியாக அப்போது அவர் கணித்திருந்தார் என பிரகாஷ் ராஜ் தன்னுடைய பேட்டியில் கூறி உள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved