MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நட்சத்திரமாக அறியப்படும் சில்க் ஸ்மிதா தனது தற்கொலைக் கடிதத்தில் எழுதிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் என்ன எழுதினார்? அவருக்கு மகன் இருந்தாரா? முழு விவரங்களை பார்ப்போம். 

3 Min read
manimegalai a
Published : Dec 02 2024, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Silk Smitha

Silk Smitha

சில்க் ஸ்மிதாவை இந்த தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சில்க் ஸ்மிதா யார் என்பது நன்றாகவே தெரியும். சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அவர் கொடுத்த கிக்கின் தாக்கம் வார்த்தையில் விவரிக்க முடியாதவை. கவர்ச்சி வேடங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகர்களுக்கு ஈடான புகழுடன் வலம் வந்த அவர் இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
 

27
Silk Smitha Letter

Silk Smitha Letter

அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர். இறப்பதற்கு முன்பு அவர் ஒரு தற்கொலைக் கடிதம் எழுதினார். அதில் தனது துயரத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினார். தான் ஏமாற்றப்பட்டதை விவரித்திருந்தார். அனைவரும் தன்னைப் பயன்படுத்தி கொண்டு ஏமாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார். அனைத்து வழிகளிலும் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறினார். ஆனால் பாபு மட்டும் எந்த சுயநலமும் இல்லாமல் இருந்ததாக சில்க் ஸ்மிதா குறிப்பிட்டார். அந்த பாபு யார்? தற்கொலைக் குறிப்பில் சில்க் ஸ்மிதா என்ன எழுதினார் என்பதைப் பார்ப்போம்.

ஆப்பாக மாறிய ஆசை! 40 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஷங்கர் பட ஹீரோயினா இது?
 

37
Silk Smitha Suicide Note

Silk Smitha Suicide Note

ஓர் அபலை பெண் என்று தொடங்கி, "கடவுளே, என் 7 வயதிலிருந்தே வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினர். பாபுவைத் தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவைத் தவிர மற்ற அனைவரும் என் கஷ்டத்தைச் சாப்பிட்டவர்கள்தான். என் பணத்தைச் சாப்பிட்டவர்கள்தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நன்மையே செய்தேன். ஆனால் எனக்குக் கெடுதல் மட்டுமே நடந்தது. என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றினார். கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். தினசரி இதனால் ஏற்படும் சித்திரவதையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 

47
Who is Babu?

Who is Babu?

ராமு, ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். அவர்களுக்கு நிறைய உதவி செய்தேன். ஆனால் அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறினார். இப்போது தரவில்லை. பாபுவைத் தவிர என் உழைப்பைச் சாப்பிடாதவர் யாரும் இல்லை. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம்தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது." என்று எழுதி இருந்தார். 

மத் தீவில் பங்களா; விதவிதமான கார் என ராஜ வாழ்க்கை வாழும் விக்ராந்த் மாஸ்ஸியின் சொத்து மதிப்பு!
 

57
Silk Smitha Death

Silk Smitha Death

ஆனால் திரையுலகில் புகழ்பெற்ற சில்க் ஸ்மிதா இறந்தபோது திரையுலகிலிருந்து யாரும் செல்லவில்லை. நடிகர் அர்ஜுன் மட்டுமே சென்றாராம். அனாதைப் பிணமாக அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

தனது தற்கொலைக் குறிப்பில் 'பாபு' என்று குறிப்பிட்டுள்ளார் சில்க் ஸ்மிதா. அந்த பாபு யார் என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அவருக்கு மகன் இருந்தாரா? யாரையாவது வளர்த்தாரா என்பது தெரிய வேண்டியுள்ளது.

67
Silk Smitha 62 Birthday

Silk Smitha 62 Birthday

1996 செப்டம்பர் 22 அன்று இந்த தற்கொலைக் குறிப்பை எழுதினார் சில்க் ஸ்மிதா. 23 ஆம் தேதி அவரது மரணச் செய்தி வெளியானது. அவர் வாழ்க்கையில் எவ்வளவு வேதனைகள் இருந்தது என்பதை இந்தக் கடிதத்தைப் பார்த்தால் புரியும்.  இன்று அவரது 64வது பிறந்தநாள் எனவே அவரை பற்றிய சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!
 

77
Silk Smitha Untold Story

Silk Smitha Untold Story

1960 டிசம்பர் 2 ஆம் தேதி சில்க் ஸ்மிதா ஏலூரில் உள்ள கோவள்ளி கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். படிக்க வசதி இல்லாததால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பிழைப்புக்காகக் கூலி வேலை செய்தார். சில நாட்களுக்குப் பிறகு திருமணமும் நடந்தது. ஆனால் கணவர் கொடுமைப்படுத்தியதால் அந்த வாழ்க்கையை விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றார். சினிமாவில் வேலை செய்பவர்களின் காலில் விழுந்து வாய்ப்புகளுக்காக முயன்றார். கடைசியில் வாய்ப்புகள் கிடைத்து வேலைக்காரி வேடங்களில் இருந்து படிப்படியாக முன்னேறி கதாநாயகியாக நடித்தார். கவர்ச்சி வேடங்களில் கவர்ந்திழுத்தார். லட்சங்களில் சம்பாதித்தார். எவ்வளவு வேகத்தில் உச்சகட்ட புகழ்ச்சியை அடைந்தாரோ... அதே வேகத்தில் தன்னுடைய வாழ்க்கையையும் முடித்து கொண்டார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சில்க் ஸ்மிதா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved