ஸ்ருதி ஹாசனுக்கு இப்படியொரு நிலையா?... பிரபல நடிகர் பட ஷூட்டிங்கின் போது வந்த மிரட்டல்...!
இதையடுத்து படக்குழுவினர் போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளனர். இதனால் சுமார் 40 போலீசார் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தப்பட்டுள்ளனராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். நட்சத்திர தம்பதியின் மகளான ஸ்ருதி அப்பாவின் திறமையோடும், அம்மாவின் அழகோடும் திரையுலகை கலக்கி வருகிறார்.
தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்கள் கூட்டம் கூடியதால படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகரான ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிய ஸ்ருதி ஹாசனுக்கு, சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரபல ஹீரோவுடன் நடிக்கும் பட அறிவிப்பு வெளியானது.
பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஸ்டாராக மாறியுள்ள பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க வயல் அருகே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால் அந்த பகுதியில் நக்சலைட் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாம். அதுமட்டுமின்றி அங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும் படக்குழுவிற்கு மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து படக்குழுவினர் போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளனர். இதனால் சுமார் 40 போலீசார் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தப்பட்டுள்ளனராம்.