'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!
நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகிய நிலையில், 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்த நிலையில், இதைத் தொடர்ந்து இவர் நடிக்க இருந்த 'வாடிவாசல்' படத்தில் இருந்தும், விலக வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து, தரமான படங்களை தேர்வு செய்து நடித்தும், தயாரித்தும், வருபவர் சூர்யா. அந்த வகையில் இவர் நடித்த சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் இவர் நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்', 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக பாலா தரப்பில் இருந்தும், சூர்யா தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் ட்ராப் ஆனதற்கு இயக்குனர் பாலா தான் முழு காரணம் என்றும், சுமார் 10 கோடி வரை சூர்யாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த படத்தில் இருந்து விலகி விட்டதால், தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 42-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சுதா கொங்கரா உள்ளிட்ட சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!
மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்த ஒப்பந்தமான வாடிவாசல் திரைப்படத்தின், டெஸ்ட் சூட் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் குறித்த இவ்வித அப்டேட்களும் வெளியாகாமல் உள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும், 'விடுதலை' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
எனவே சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எழுத அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகாத நிலையில், வெற்றிமாறன் தரப்பிலிருந்து... வெளியாகியுள்ள தகவலின்படி இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், கூடிய விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.