சீரியல் நடிகை ஷிவானியா இது?.... அடையாளமே தெரியாத பழைய போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். அப்படி தீவிர முயற்சியில் தீயாய் இறங்கியுள்ள சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனின் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்தது. எனவே அந்த ரூட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், படு கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைக்கிறார்.
தற்போது ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த ஷிவானி, கொரோனா பீதி காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.
சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய போட்டோ ஒன்றுடன் தற்போதைய போட்டோவையும் இணைந்து வெளியிட்டுள்ளார். அத்துடன் முடியாது என எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்களோ ரசகுல்லா போன்ற செழுமையான அழகால் மனதை கொள்ளை கொண்ட ஷிவானியா இது என ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷிவானி அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் அந்த பழைய போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது