சித்ராவின் காதலர் நல்லவனே இல்லை... பல பெண்களுடன் தொடர்பு..! புட்டு புட்டு வைத்த தோழி ரேகா நாயர்..!
சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சித்ராவின் தற்கொலை குறித்தும், ஹேமந்தை பற்றியும்... சித்ராவின் நீண்ட நாள் தோழி ரேகா நாயர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய தோழி குறித்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரேகா... "சித்ரா ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு, சினிமா துறை மீது கொண்ட ஆர்வத்தால் மட்டுமே வளர்ந்தவர். அவர் இவ்வளவு பிரபலமாக இருந்த போதும் கூட, அவரது குடும்பத்தில் பெரிதாக உடன்பாடு இல்லை. எனினும் மகளின் ஆசைக்காக ஏற்று கொண்டனர்.
அதே போல், சித்ராவை பொறுத்தவரை அனைவருடனும் ஜாலியாக பேசுவார். யாரும் நெருங்கிய தோழர்கள் என்று சொல்லமுடியாது. என்னுடன் கூட சில விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வார். குறிப்பாக ஒரு மாதமாக அவர், சரியான மன நிலையில் இல்லை என்பது தெரியும். எப்போதும் போனை காதில் வைத்து கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.
இதற்க்கு காரணம் ஹேமந்த் தான். சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்ததுமே அவரிடமும், தங்கள் இருவருக்கும் உள்ள நண்பர்களிடமும் கூறி, அவன் நல்லவன் இல்லை என கூறியுள்ளேன். காரணம் ஹேமந்தை பல பெண்களுடன், பல்வேறு பப்புகளில் நானே பார்த்திருக்கிறேன். சித்ராவிற்கும் இந்த விஷயங்கள் தெரியும் இருந்தும் அவர் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டார்.
இதை விட மோசமான, மன வலிகளை தர கூடிய விஷயங்களில் இருந்து கூட வெளியே வந்துள்ள சித்ரா, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், அவரை அந்த அளவிற்கு டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார் என்பது தான் தனக்கு தோன்றுகிறது.
திருமண நிச்சயம் செய்ய பட்ட ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமும் ஆகிவிட்டது. ஒரு மனைவி குளிக்கும் போது ஏன் கணவர் வெளியில் செல்ல வேண்டும் என்கிற சந்தேகத்தை அழுத்தமாக வைத்துள்ள ரேகா, பிரேத பரிசோதனையில் உண்மை என்ன என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார்.
பெற்றோரின் ஆசைக்காக சீக்கிரம் வீடுகட்டி, அவர்களுக்கு 60 ஆவது திருமணம், சித்ராவின் நிச்சயம், திருமணம் என சீக்கிரமாக அனைத்தையும் முடித்து கொண்டு இப்படி செய்துவிட்டார் என கண்கலங்க கூறியுள்ளார் ரேகா.