MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

எம்.ஜி.ஆர்-ஐ நடிகவேல் எம்.ஆர்.ராதா எதற்காக சுட்டார் என்பது குறித்து அவரின் மகனும் நடிகருமான ராதாரவி மனம்திறந்து பேசி உள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Dec 27 2022, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது எம்.ஜி.ஆர். தான். அவர் மறைந்தாலும் இன்றளவும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவர் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளே காரணம். இப்படி மக்களால் கொண்டாடப்பட்ட ஒருவராக இருந்த எம்.ஜி.ஆரை, கடந்த 1964-ம் ஆண்டு நடிகவேல் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார்.

24

அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் எதற்காக சுட்டார் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலாவருகின்றன. ஆனால் உண்மை காரணம் என்ன என்பது தெரியாமலே இருந்து வந்த நிலையில், எம்.ஆர்.ராதாவின் மகனான ராதா ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் அதுகுறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : “எங்க அப்பாவும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர் ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்கிற படத்தை எடுக்க ஒரு லட்சம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். உடனே என் தந்தை, நான் உனக்கு பணம் தருகிறேன் என சொல்லியுள்ளார். பின்னர் எம்.ஜி.ஆர். உடைய கால்ஷீட்டும் வாங்கி தருவதாக சொல்லியுள்ளார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல... என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - கணவரின் பேச்சால் ஷாக்கான மைனா

34

அது எனது தந்தையின் 100-வது படம். அதற்காக ஆலந்தூரில் உள்ள சேட்டு ஒருவரிடம் எங்கள் தோட்டத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு லட்சம் வாங்கி கொடுத்தார். நியாயப்படி பார்த்தால் அந்த ஒரு லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் வாசு தான் என் தந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர். அதை நான் தருகிறேன் என என் தந்தையிடம் சொல்லிவிட்டார். அது தான் என் தந்தைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணம்.

பணத்தை திருப்பி கொடுக்காமல் 3, 4 நாள் என் தந்தையை சுத்தவிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். என் தந்தை மிகவும் கோபக்காரர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதே கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பது தான். எம்.ஜி.ஆர். பணத்தை கொடுக்காமல் சுத்தவிட்ட கோபத்தில் தான் அவரை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார் என் தந்தை.

44

இந்த வழக்குல என் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைத்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதை 3 வருடமாக மாற்றினோம். அந்த சமயத்தில் ஆட்சி மாற்றம் வேற நடந்தது. கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் என் தந்தையை விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த சமயத்தில் கலைஞர் மட்டும் இல்லேனா என் தந்தையை ஜெயில்லயே வச்சி முடிச்சிருப்பாங்க” என ராதாரவி கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? - தாய் ஷோபா கொடுத்த சிம்பிள் விளக்கம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved