- Home
- Cinema
- Pandian Stores 2 ட்விஸ்ட்! : கவரிங் நகையும் கதி கலங்கிய பாக்கியமும் - போலீஸ் நிலையத்தில் அரங்கேறிய அதிரடி!
Pandian Stores 2 ட்விஸ்ட்! : கவரிங் நகையும் கதி கலங்கிய பாக்கியமும் - போலீஸ் நிலையத்தில் அரங்கேறிய அதிரடி!
Pandian Stores 2 12th & 17th January 2026 - Promo, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் 80 பவுன் நகை மோசடி விவகாரம் முடிவுக்கு வருகிறது. காவல் நிலையத்தில் மீனா உண்மையை உடைக்க, தங்கமயில் தனதுதாய் தான் காரணம் என்று வாக்குமூலம் அளிக்கிறார்.

முடிவுக்கு வரும் நகை மோசடி விவகாரம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அடுத்த வாரத்திற்கான (ஜனவரி 12 - 17, 2026) ப்ரோமோ காட்சிகள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த "80 பவுன் நகை" மோசடி விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் தருணத்தை இந்த வார எபிசோட்கள் எட்டியுள்ளன.
காவல் நிலையத்தில் பாக்கியத்தின் பகீர் புகார்
தங்கமயிலின் அம்மா பாக்கியம், பாண்டியன் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், காவல் நிலையத்திலும் தனது நாடகத்தை தொடர்கிறார். "நாங்கள் 80 பவுன் நகை போட்டோம், ஆனால் இப்போது எல்லா நகையும் கருத்துப் போய்விட்டது. என் மகளை கொடுமைப்படுத்தி நகைகளை மாற்றிவிட்டார்கள்" என்று பாண்டியன் குடும்பத்தின் மீது பழி சுமத்துகிறார்.
மீனாவின் அதிரடி பதிலடி
பாக்கியத்தின் பொய்களைக் கேட்டு ஆத்திரமடைந்த மீனா, அனைவர் முன்னிலையிலும் உண்மையை உடைக்கிறார். "இவங்க போட்டதுல 8 பவுன் மட்டும்தான் தங்கம், மீதி எல்லாமே கவரிங் தான்!" என்று மீனா கூற, பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
பாண்டியன் மற்றும் மகன்கள் ஆச்சரியத்துடன் பார்க்க, "இந்த உண்மை தங்கமயிலுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். பிரச்சினை பெரிதாக போகக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு நாள் அமைதியாக இருந்தோம்" என்று மீனா மற்றும் ராஜி இருவரும் உண்மையை விளக்குகிறார்கள்.
தங்கமயிலின் வாக்குமூலம்.!ஒரு பெரிய திருப்பம்.!
போலீசார் தங்கமயிலை அழைத்து, "உன் அம்மா சொல்வது உண்மையா? உன்னை யாரும் அடிக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். வழக்கம்போல் பதட்டத்துடன் இருக்கும் தங்கமயில், இந்த முறை துணிச்சலாக உண்மையை ஒப்புக்கொள்கிறார்:தன்னை யாரும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தவில்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பொய்களுக்கும் தனது அம்மாதான் காரணம் என்று உண்மையை உடைக்கிறார்.தனது கணவர் தன்னை அடிக்கவில்லை என்பதையும் போலீசாரிடம் உறுதிப்படுத்துகிறார்.
கைது நடவடிக்கையும் தொடரும் மர்மமும்
தங்கமயிலின் வாக்குமூலத்தை அடுத்து, பொய் புகார் அளித்ததற்காகவும், ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதற்காகவும் பாக்கியத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பாண்டியன் குடும்பத்தினர் விடுதலையாகி வெளியே வரும்போது, தங்கமயில் தன் தவறை உணர்ந்து அழுதபடி நிற்கிறார். ஆனால், இவ்வளவு பெரிய உண்மையை மறைத்த தங்கமயிலை பாண்டியன் மீண்டும் மருமகளாக ஏற்றுக்கொள்வாரா? அல்லது அவரை வீட்டை விட்டு துரத்துவாரா? என்பதே இந்த வாரத்தின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

